Tuesday, May 10, 2011

Aariro Aarariro - Deiva Thirumagan

ஆரிரோ  ஆராரிரோ  இது  தந்தையின்  தாலாட்டு
பூமியே  புதிதானதே  இவள்  மழலையின்  மொழி  கேட்டு
தாயாக  தந்தை  மாறும்  புது  காவியம்
இவன்  வரைந்த  கிறுக்கலில்  இவளோ  உயிர்  ஓவியம்
இரு  உயிர்  ஒன்று  சேர்ந்து  இங்கு  ஓர்  உயிர்  ஆகுதே
கருவறை  இல்லை  என்றபோதும்  சுமந்திட  தோணுதே
விழியோரம்  ஈரம்  வந்து  குடை  கேட்குதே

ஆரிரோ  ஆராரிரோ  இது  தந்தையின்  தாலாட்டு
பூமியே புதிதானதே  இவள்  மழலையின்  மொழி  கேட்டு

முன்னும்  ஒரு  சொந்தம்  வந்து  மழை  ஆனதே
மழை  நின்று  போனால்  என்ன  மரம்  தூறுதே
வயதால் வளர்ந்தும்  இவன்  பிள்ளையே
பிள்ளை  போல்  இருந்தும்  இவள்  அன்னையே
இதுபோல்  ஆனந்தம்  வேறில்லையே
இரு  மனம்  ஒன்று  சேர்ந்து  இங்கே  மௌனத்தில்  பேசுதே
ஒரு  நொடி  போதும்  போதும்  என்று  ஓர் குரல்  கேட்குதே
விழி  ஓரம்  ஈரம்  வந்து  குடை  கேட்குதே

ஆரிரோ  ஆரிரோ  இது  தந்தையின்  தாலாட்டு
பூமியே  புதிதானதே  இவள்  மழலையின்  மொழி  கேட்டு

கண்ணாடிக்கு  பிம்பம்  அதை  இவள்  காட்டினாள்
கேட்காத  ஓர்  பாடல்  அதில்  இசை  மீட்டினாள்
அடடா  தெய்வம்  இங்கே  வரமானதே
அழகாய்  வீட்டில்  விளையாடுதே
அன்பின்  விதை  இங்கே  மரமானதே
கடவுளை  பார்த்ததில்லை  இவளது   கண்கள்  காட்டுதே
பாசத்தின்  முன்பு  இன்று  உலகின்  அறிவுகள்  தோற்குதே
விழியோரம்  ஈரம்  வந்து  குடை  கேட்குதே

ஆரிரோ  ஆரரிரோ  இது  தந்தையின்  தாலாட்டு
பூமியே  புதிதானதே  இவள்  மழலையின்  மொழி  கேட்டு

No comments:

Post a Comment