Friday, September 21, 2012

மாலை மங்கும் நேரம்

படம் : ரௌத்திரம்
இசை : பிரகாஷ் நிக்கி
பாடியது: றேனென ரெட்டி (Renena reddy)
கவிஞர் : தாமரை


ஆஆஹ்ஹ்ஹ ...

மாலை  மங்கும்  நேரம்
ஒரு  மோகம்  கண்ணின்  ஓரம்
உன்னை  பார்த்துக்கொண்டே  நின்றாலும்
போதும்  என்று  தோன்றும்
காலை  வந்தால்  என்ன
வெய்யில்  எட்டி  பார்த்தால்  என்ன
கடிகாரம்  காட்டும்  நேரம்
அதை  நம்ப  மாட்டேன்  நானும்
பூங்க்காட்ட்ரும்  போர்வை  கேட்க்கும்  நேரம்  நேரம்
தீயாய்  மாறும்  தேகம்  தேகம்
உன்  கைகள்  என்னை  தொட்டு  போடும்  கோலம்
வாழ்வின்  எல்லை  தேடும்  தேடும்

மாலை  மங்கும்  நேரம்
ஒரு  மோகம்  கண்ணின்  ஓரம்
உன்னை  பார்த்துக்கொண்டே  நின்றாலும்
போதும்  என்று  தோன்றும்

(vocalizing)

ஒரு  வீட்டில்  நாம்  இருந்து
ஓர்  இலையில்  நம்  விருந்து
இரு  தூக்கம்  ஒரு  கனவில்
மூழ்கி  வாழ்க்கை  தொடங்கும்
நான்  சமையல்  செய்திடுவேன்
நீ  வந்து  அணைத்திடுவாய்
என்  பசியும்  உன்  பசியும்
சேர்ந்து  ஒன்றாய்  அடங்கும்
நான்  கேட்க  ஆசைப்பட்ட  பாடல்  நூறு
நீயும்  நானும்  சேர்ந்தே  கேட்ப்போம்
தாலாட்டை  கண்ணில்  சொன்ன  ஆணும்  நீ  தான்
காலம்  நேரம்  தாண்டி  வாழ்வோம்

மாலை  மங்கும்  நேரம்
ஒரு  மோகம்  கண்ணின்  ஓரம்
உன்னை  பார்த்துக்கொண்டே  நின்றாலும்
போதும்  என்று  தோன்றும்
காலை  வந்தால்  என்ன
வெய்யில்  எட்டி  பார்த்தால்  என்ன
கடிகாரம்  காட்டும்  நேரம்
அதை  நம்ப  மாட்டேன்  நானும்

பால்  சிந்தும்  பௌர்ணமியில்
நாம்  நனைவோம்  பனி  இரவில்
நம்  மூச்சின்  காய்ச்சலில்
முள்  மீதின்  பணியும்  அடங்கும்
வீடெங்கும்  உன்  பொருட்கள்
அசைந்தாடும்  உன்  உடைகள்
தனியாக  நான்  இல்லை
என்றே  சொல்லி  சிணுங்கும்
தீண்டாமல்  தீண்டி  போகும்  வாடை காற்றே
தூக்கம்  தீர்ந்து   நாட்கள்  ஆச்சே
உன்  வாசம்  என்  மேல்  கொட்டும்  ஆடி   போனேன்
வாசபூ ஆக நான்  நானும்  ஆனேன்

மாலை  மங்கும்  நேரம்
ஒரு  மோகம்  கண்ணின்  ஓரம்
உன்னை  பார்த்துக்கொண்டே  நின்றாலும்
போதும்  என்று  தோன்றும்
காலை  வந்தால்  என்ன
வெய்யில்  எட்டி  பார்த்தால்  என்ன
கடிகாரம்  காட்டும்  நேரம்
அதை  நம்ப  மாட்டேன்  நானும்

No comments:

Post a Comment